Wednesday, July 06, 2005

பிபிசி ஆனந்தி பணி ஓய்வு

ஆனந்தியின் செய்தி

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி பி சி தமிழோசையில் பணி புரிந்து வந்த மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் செவ்வாய்க் கிழமையோடு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

1970 களில் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானர். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம்

இலங்கை யாழ்குடா நாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் மிகவும் ஊக்குவித்த முன்னாள் தமிழ்ப் பிரிவுத் தலைவர் சங்கரை மிக நன்றியோடு நினைவு கூறுகிறார். தன் பணியில் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக தமிழோசை நேயர்களுக்கும் அவர் தன் நன்றியினைத் தெரிவிக்கிறார்.