Thursday, October 17, 2013

தனியார் வானொலிகளில் செய்தி : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஏற்கனவே தனியார் தொலைக்காட்சிகளுக்கு செய்திகளை வெளியிட அனுமதித்துள்ள போது, தனியார் வனொலிகளில் செய்திகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்திருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தனியார் வானொலி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: தினமணி, 17 October 2013