Wednesday, March 06, 2019

அம்மா சமுதாய வானொலி

சென்னையில் அம்மா சமுதாய வானொலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா சமுதாய வானொலி மூலம் முதல்வர் ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் உரையாட இயலும். இந்தியாவிலேயே முதன்முறையாக கைபேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமுதாய வானொலியில் தினந்தோறும் ஒரு கோடி மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுடன் முதல்வர் பேச முடியும்.மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அரசின் செய்திகள் சென்றடைய சமுதாய வானொலி உதவும். (நன்றி: தினகரன்)